sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

அயராத உழைப்பு!

/

அயராத உழைப்பு!

அயராத உழைப்பு!

அயராத உழைப்பு!


PUBLISHED ON : மே 03, 2025

Google News

PUBLISHED ON : மே 03, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் மாவட்டம், சின்னகாமன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், 1977ல், 10ம் வகுப்பு படித்தேன். சொந்த கிராமத்தில் இருந்து, 1 கி.மீ., நடந்தே பள்ளிக்கு செல்வேன். தலைமையாசிரியரான வீ.வீராசாமி, எங்களுக்கு வகுப்பாசிரியராகவும் இருந்தார். மிகவும் கண்டிப்பு மிக்கவர்; பார்வையாலே மிரட்டி கட்டுப்படுத்துவார். தேவை அறிந்து உடனுக்குடன் உதவுவார். சக ஆசிரியர்களை கண்காணித்து முறையாக வேலை வாங்குவார்.

பள்ளி அருகே காலை 8:20 மணிக்கு ஒரு பேருந்து வரும். ஆசிரியர், மாணவர்கள் உடனே, 'அலர்ட்' ஆகி விடுவர். அந்த பேருந்தில் தான் வருவார், தலைமையாசிரியர். குடை, பையுடன் கம்பீரமாக பள்ளி வளாகத்துக்குள் நுழைவார். அது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

காலை இறை வணக்க கூட்டத்தில் வாழ்க்கைக்கு உபயோகமான தகவல்களை சொல்வார். அன்று, 'அயராது உழைத்தால் எந்த செயலிலும் ஜெயிக்கலாம்...' என அறிவுரைத்தார். அதை மனதில் பதித்து பள்ளி படிப்பை சிறப்பாக நிறைவு செய்தேன். கல்லுாரியில் சேர்ந்து நன்கு படித்தேன். ஆய்வுகள் செய்து டாக்டர் பட்டம் பெற்றேன்.

தற்போது என் வயது, 60; பல்கலைக் கழகத்தில் நுாலகராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணிக்காலத்தில் மாணவர்களுக்கு குறைவின்றி உதவிகள் செய்தேன். இன்றும் புத்தெளிச்சியுடன் செயல்படுகிறேன். இதுபோல் வாழ்வதற்கு உற்சாகம் ஊட்டிய பள்ளி தலைமையாசிரியர் வீராசாமியை நன்றியுடன் போற்றுகிறேன்.



- ரா.பத்மாவதி, சிவகங்கை.

தொடர்புக்கு: 94863 61235







      Dinamalar
      Follow us