/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரசவித்த இளம்பெண் உயிரிழப்பு டாக்டர்கள் மீது குற்றச்சாட்டு
/
பிரசவித்த இளம்பெண் உயிரிழப்பு டாக்டர்கள் மீது குற்றச்சாட்டு
பிரசவித்த இளம்பெண் உயிரிழப்பு டாக்டர்கள் மீது குற்றச்சாட்டு
பிரசவித்த இளம்பெண் உயிரிழப்பு டாக்டர்கள் மீது குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 14, 2025 10:39 PM

தாவணகெரே : பிரசவம் நடந்த இரண்டே நாட்களில் பெண் இறந்தார். இதற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என, குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தாவணகெரே மாவட்டம், ஹரப்பனஹள்ளியை சேர்ந்தவர் துர்கம்மா, 21. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, மூன்று நாட்களுக்கு முன்பு பிரசவ வலி துவங்கியது.
குடும்பத்தினர் உடனடியாக அவரை, ஹரப்பனஹள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 'சுகப்பிரசவம் கஷ்டம் என்பதால், சிசேரியன் செய்ய வேண்டும்' என, டாக்டர்கள் கூறினர். இதற்கு குடும்பத்தினர் சம்மதித்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, அவருக்கு சிசேரியன் செய்தனர். பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் அவரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்காக அவரை சிடகேரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு அவருக்கு 12 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டது.
அவரது கர்ப்பப்பையில் பாதிப்பு ஏற்பட்டதால், அதை அகற்ற வேண்டும் என, டாக்டர்கள் கூறினர். இதற்கும் குடும்பத்தினர் சம்மதித்தனர். அதன்பின் அறுவை சிகிச்சை செய்து, கர்ப்பப்பை அகற்றப்பட்டது. அப்போது அவருக்கு அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டதில், துர்கம்மா நேற்று உயிரிழந்தார்.
மகளின் உயிரிழப்புக்கு, டாக்டர்களின் அலட்சியமே காரணம் என, பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.