sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

அதிகாரத்துக்காகவே 1975ல் அவசர நிலை முன்னாள் முதல்வர் எடியூரப்பா குற்றச்சாட்டு

/

அதிகாரத்துக்காகவே 1975ல் அவசர நிலை முன்னாள் முதல்வர் எடியூரப்பா குற்றச்சாட்டு

அதிகாரத்துக்காகவே 1975ல் அவசர நிலை முன்னாள் முதல்வர் எடியூரப்பா குற்றச்சாட்டு

அதிகாரத்துக்காகவே 1975ல் அவசர நிலை முன்னாள் முதல்வர் எடியூரப்பா குற்றச்சாட்டு


ADDED : ஜூன் 25, 2025 08:45 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 08:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : ''இந்திரா பிரதமராக இருந்தபோது, 1975ல் அவசர நிலையை அறிவித்தார். அவரின் அதிகாரத்துக்காக, புனிதமான அரசியலமைப்பு தியாகம் செய்யப்பட்டது,'' என, முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேசினார்.

பெங்களூரு டவுன் ஹானில் நேற்று, 'சமூக நீதிக்கான பெங்களூரு குடிமக்கள்' அமைப்பு, '1975 அவசர நிலை 50வது ஆண்டு இருண்ட நாட்கள்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தியது.

இதில் பங்கேற்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேசியதாவது:

இந்திரா பிரதமராக இருந்தபோது, 1975ல் அவசர நிலையை அறிவித்தார். அவரின் அதிகாரத்துக்காக, புனிதமான அரசியலமைப்பு தியாகம் செய்யப்பட்டது.

அவசர நிலையின்போது, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. அதிகாரத்துக்காக, பத்திரிகை சுதந்திரம், நீதித்துறையின் சுயாட்சி, பொது உரிமைகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டன.

நீதித்துறை, நிர்வாகம், சட்டசபை அமைப்புகளை தங்கள் கைப்பிடியில் வைத்திருப்பதற்காக, அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.

இக்காலகட்டத்தில் பேச்சு சுதந்திரம், அரசியல் சுதந்திரம் பறிக்கப்பட்டன. பத்திரிகை சுதந்திரம் முழுதும் பறிக்கப்பட்டது. ஜனநாயகம் நெரிக்கப்பட்டு, எங்கும் குழப்பம் நேர்ந்தது. சுதந்திர போராட்டத்தில் முன்னணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, நாடு சுதந்திரம் அடைந்த பின், அதிகாரத்தில் இருப்பதற்காக, அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us
      Arattai