ADDED : மார் 25, 2025 09:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்சார துறைக்கு 3,847 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டில்லியில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் தடையில்லா மற்றும் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படும். மேலும், 'பி.எம். சூர்யா கர்' இலவச மின்சாரத் திட்டத்தை செயல்படுத்த மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துடன் டில்லி அரசு ஒப்பந்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் டில்லியின் குடியிருப்பு நுகர்வோருக்கு 78,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்க்க 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.