sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அசாமில் ராகுல் யாத்திரை தடுத்து நிறுத்தம் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுத்ததால் பரபரப்பு

/

அசாமில் ராகுல் யாத்திரை தடுத்து நிறுத்தம் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுத்ததால் பரபரப்பு

அசாமில் ராகுல் யாத்திரை தடுத்து நிறுத்தம் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுத்ததால் பரபரப்பு

அசாமில் ராகுல் யாத்திரை தடுத்து நிறுத்தம் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுத்ததால் பரபரப்பு


ADDED : ஜன 23, 2024 05:49 AM

Google News

ADDED : ஜன 23, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகாவ்ன்: அசாமில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ சங்கர்தேவா கோவிலுக்கு செல்ல, காங்., - எம்.பி., ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல், ''கோவிலுக்கு யார் எப்போது செல்ல வேண்டும் என்பதை பிரதமர் மோடி தான் முடிவு செய்கிறார்,'' என, தெரிவித்தார்.

காங்., - எம்.பி., ராகுல் மேற்கொண்டுள்ள, 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை' தற்போது வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ளது.

இங்கு, 15 - 16ம் நுாற்றாண்டில் வாழ்ந்த துறவி ஸ்ரீ ஸ்ரீ சங்கர்தேவாவின் கோவில், போர்துவா என்ற இடத்தில் உள்ளது. இந்த கோவிலுக்கு ராகுல் நேற்று காலை செல்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி அந்த கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடப்பதால், அந்த நேரத்தில் ராகுல் அங்கு செல்வதை தவிர்க்கும்படி, பா.ஜ.,வை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கோரிக்கை விடுத்தார்.

அதிகாலை அல்லது மாலை 3:00 மணிக்கு மேல் கோவிலுக்கு செல்லும்படி கேட்டுக் கொண்டார். கோவில் நிர்வாகமும், 'மாலை 3:00 மணிக்கு ராகுல் வருவதே சரியாக இருக்கும்' என, நேற்று முன்தினம் தெரிவித்தது.

ஆனால் இதை ஏற்க மறுத்த ராகுல், ஸ்ரீ ஸ்ரீ சங்கர்தேவா கோவிலுக்கு நேற்று காலை புறப்பட்டார். கோவிலில் இருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ள ஹாய்போரகாவ்ன் என்ற இடத்தில், மாவட்ட நிர்வாகத்தினர் ராகுலை தடுத்து நிறுத்தினர்.

இதற்கு மேல் அவரது பயணத்தை தொடர அனுமதி மறுத்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. மகளிர் காங்., தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் சேர்ந்து ராகுலும் போராட்டத்தில் ஈடுபட்டார். அசாம் காங்., - எம்.பி., கவுரவ் கோகோய் மற்றும் படத்ரவ காங்., - எம்.எல்.ஏ., சிபாமோனி போரா ஆகியோர் மட்டும் கோவிலுக்கு சென்று, நிர்வாகத்தினருடன் பேச்சு நடத்த அனுமதிக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து ராகுல் கூறியதாவது:

ஸ்ரீ சங்கர்தேவாவை போல, மக்களை ஒன்று திரட்டுவதும், வெறுப்புணர்வு பரவாமல் தடுப்பதுமே எங்கள் நோக்கம். அவர் எங்கள் குரு. அவர் வழியில் நாங்கள் பயணிக்கிறோம். பிரச்னை செய்வது எங்கள் நோக்கம் அல்ல. கோவிலுக்கு சென்று ஸ்ரீ சங்கர்தேவாவை அமைதியாக வழிபடுவதே நோக்கம்.

ஆனால் என்னை மட்டும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்காதது ஏன்? யார் எப்போது கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதை பிரதமர் மோடி தான் முடிவு செய்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, கோவிலுக்கு செல்ல ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்., கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

தவிர்க்க அறிவுறுத்தல்!

அசாமின் மோரிகாவ்ன் மாவட்டத்தில், தெருமுனை கூட்டம் நடத்துவதை தவிர்க்கும்படி, ராகுலுக்கு போலீஸ் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.மோரிகாவ்ன் போலீஸ் கமிஷனர் தேவாஷிஷ் சர்மா, காங்., நிர்வாகிகளுக்கு எழுதியுள்ள கடிதம்:அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் ஒற்றுமை யாத்திரை ஒரே நேரத்தில் நடப்பதால், சில சமூகவிரோதிகள் மாவட்ட அமைதியை குலைக்கும் முயற்சியில் ஈடுபட திட்டமிட்டள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.இஸட் ப்ளஸ் பாதுகாப்பு பெற்றுள்ள தலைவரான ராகுலின் பாதுகாப்பு கருதி, மோரிகாவ்ன் மாவட்டத்தில் தெருமுனை கூட்டம் நடத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடாது என்ற காரணத்தினால், ஸ்ரீமந்தா சங்கர்தேவா சவுக்கில் இருந்து பாதயாத்திரை செல்வதையும் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us