sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கொழுக்குமலைக்கு பாதுகாப்பான பயணம்: உறுதி செய்த அதிகாரிகள்

/

கொழுக்குமலைக்கு பாதுகாப்பான பயணம்: உறுதி செய்த அதிகாரிகள்

கொழுக்குமலைக்கு பாதுகாப்பான பயணம்: உறுதி செய்த அதிகாரிகள்

கொழுக்குமலைக்கு பாதுகாப்பான பயணம்: உறுதி செய்த அதிகாரிகள்


ADDED : செப் 19, 2025 03:16 AM

Google News

ADDED : செப் 19, 2025 03:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:கேரள, தமிழக மாநில எல்லைகளான இடுக்கி, தேனி மாவட்டங்களை இணைப்பதாக கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரம் அடி உயரத்தில் கொழுக்குமலை அமைந்துள்ளது.

இப்பகுதிக்கு சூரியநல்லி வழியாக மட்டுமே செல்ல முடியும். கொழுக்குமலையில் நுரை போன்று தவழும் மேகங்களுக்கு இடையே சூரியன் உதயமாகும் ரம்மியமான காட்சியையும் அஸ்தமனத்தையும் காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் செல்வதுண்டு.

சூலியநல்லி - கொழுக்குமலை இடையே 12 கி.மீ., தூரம் கரடு, முரடான ரோடு என்பதால் ஜீப்புகளில் மட்டும் செல்ல முடியும்.

ஒரு ஜீப்பில் ஆறு பேர் பயணிக்க கட்டணம் ரூ.3ஆயிரம். அதிகாலை 4:00 முதல் மாலை 5:00 மணி வரை செல்லலாம்.

தகுதி சான்று அவசியம் கொழுக்குமலைக்கு செல்ல 200க்கும் மேற்பட்ட ஜீப்புகளுக்கு தகுதி சான்றுகள் வழங்கி பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அவை குறிப்பிட்ட கால அளவில் உடும்பன்சோலை இணை போக்குவரத்து துறை அதிகாரி தலைமையில் ஆய்வு நடத்தப்படுகிறது. குறிப்பாக டிரைவர்கள் மது அருந்தியதை கண்டறிய 'பிரீத் அனலைசர்' கருவி மூலம் பரிசோதிக்கப்படுகிறது.

அதிகாரிகள் கூறியதாவது: கொழுக்குமலைக்கு பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்பட்டதால் அங்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொடர் ஆய்வு மூலம் மது அருந்துவதை டிரைவர்கள் பலர் கைவிட்டனர். நல்ல வருவாயும் கிடைக்கிறது என்றனர்.






      Dinamalar
      Follow us