sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்திய வீரர் சுக்லா குழு இன்று விண்வெளி நிலையத்திற்கு பயணம்; மைல்கல் என நெகிழ்ச்சி பேட்டி

/

இந்திய வீரர் சுக்லா குழு இன்று விண்வெளி நிலையத்திற்கு பயணம்; மைல்கல் என நெகிழ்ச்சி பேட்டி

இந்திய வீரர் சுக்லா குழு இன்று விண்வெளி நிலையத்திற்கு பயணம்; மைல்கல் என நெகிழ்ச்சி பேட்டி

இந்திய வீரர் சுக்லா குழு இன்று விண்வெளி நிலையத்திற்கு பயணம்; மைல்கல் என நெகிழ்ச்சி பேட்டி

5


ADDED : ஜூன் 25, 2025 09:06 AM

Google News

5

ADDED : ஜூன் 25, 2025 09:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பால்கன்-9 ராக்கெட்டில் மூலம் இன்று (ஜூன் 25) நண்பகல் 12 மணிக்கு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழு விண்வெளி நிலையத்திற்கு செல்கிறது. ''இந்த பணி ஒரு மைல்கல். இந்த பணியின் வெற்றிக்காக இந்திய மக்கள் பிரார்த்தனை செய்யுங்கள்'' என சுக்லா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின், 'ஆக்சியம் ஸ்பேஸ்' தனியார் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயண திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இணைந்து, இப்பணியை செய்து வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று, 14 நாட்கள் தங்கி ஆய்வு செய்ய உள்ளனர். பல்வேறு காரணங்களால் இந்த பயணம் தொடர்ந்து 7 முறை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட்டில் மூலம் இன்று (ஜூன் 25) நண்பகல் 12 மணிக்கு இந்திய வீரர் சுக்லா குழு விண்வெளி நிலையத்திற்கு செல்கிறது.

28 மணிநேர பயணத்திற்கு பிறகு, நாளை (ஜூன் 26) மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் அடைய உள்ளது. பல்வேறு காரணங்களால் தொடர்ந்து 7 முறை ஒத்திவைக்கப்பட்டு தற்போது 8வது முறையாக வெற்றிகரமாக விண்ணில் பாய உள்ளது.

ஒரு மைல்கல்

இது தொடர்பாக, சுபன்ஷூ சுக்லா கூறியதாவது: இந்திய மக்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த பணி ஒரு மைல்கல். இந்த பணியின் வெற்றிக்காக இந்திய மக்கள் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us