மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம் நிர்ணயம் செய்தது எப்படி?: பள்ளிக்கல்வி துறைக்கு கோர்ட் கேள்வி
மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம் நிர்ணயம் செய்தது எப்படி?: பள்ளிக்கல்வி துறைக்கு கோர்ட் கேள்வி
UPDATED : ஜூலை 25, 2024 12:00 AM
ADDED : ஜூலை 25, 2024 05:29 PM

மதுரை:
ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம் நிர்ணயம் செய்தது எப்படி? என பள்ளிக்கல்வி துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊதியம் நிர்ணயித்ததை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(ஜூலை 25) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம் நிர்ணயம் செய்தது எப்படி? தற்போதைய விலைவாசியில் மக்களை பற்றி யோசிக்க மாட்டீர்களா? குடும்பம் நடத்த ஒரு நாளைக்கு ரூ.200 போதுமா? இது போன்ற அரசாணைகள் எப்படி பிறப்பிக்கப்படுகின்றன. இது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

