sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சேறும், சகதியுமான சாலை: மதிக்கிருஷ்ணாபுரம் மக்கள் அவதி

/

சேறும், சகதியுமான சாலை: மதிக்கிருஷ்ணாபுரம் மக்கள் அவதி

சேறும், சகதியுமான சாலை: மதிக்கிருஷ்ணாபுரம் மக்கள் அவதி

சேறும், சகதியுமான சாலை: மதிக்கிருஷ்ணாபுரம் மக்கள் அவதி


ADDED : அக் 20, 2025 10:21 PM

Google News

ADDED : அக் 20, 2025 10:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: மதிக்கிருஷ்ணாபுரத்தில் மண் சாலை சேறும், சகதியுமாக மாறியதால், அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பாகூர் தொகுதி, மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் தார் சாலை, குடிநீர், தெருமின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கிராமத்தில், புதிதாக உருவான காந்தி நகர் மற்றும் அதனையொட்டிய குடியிருப்பு பகுதியில் தற்போது ஏராளமான வீடுகள் உருவாகி உள்ளன. இப்பகுதியில், சாலை, கழிவு நீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்திட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து,முதற்கட்டமாக, கிராவல் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், சரியான முறையில் மண் சமன் செய்யாமல், நீண்ட நாட்களாக பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது.

தற்போது, வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. அவ்வழியாக செல்லும் பொது மக்கள் வழுக்கி விழுந்து சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, மதிக்கிருஷ்ணாபுரத்தில், மண் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us