sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இரட்டை கருப்பை குறைபாடு: 48 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு

/

இரட்டை கருப்பை குறைபாடு: 48 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு

இரட்டை கருப்பை குறைபாடு: 48 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு

இரட்டை கருப்பை குறைபாடு: 48 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு


ADDED : ஜூன் 28, 2025 01:36 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஜூன் 28-

பெண்ணுக்கு இருந்த இரட்டை கருப்பையை நுட்பமான, 'லேப்ரோஸ்கோபி' சிகிச்சை வாயிலாக அகற்றி, எஸ்.ஆர்.எம்., குளோபல் மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

மருத்துவமனையின் மகப்பேறு நலத்துறை நிபுணர்கள் பிருத்வி, சுபாஷ்ஸ்ரீ ஆகியோர் கூறியதாவது:

பிறவியிலே சிலருக்கு இரட்டை கருப்பை உருவாகும் குறைபாடு ஏற்படும். இதனால், மாதவிடாயில் துவங்கி கருத்தரித்தல் வரை பல்வேறு இடர்பாடுகள் உருவாகலாம்.

அப்படி ஒரு சூழலில், கடுமையான வலி மற்றும் ரத்தப்போக்கு பிரச்னையுடன், 48 வயது பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு, தலா 16 செ.மீ., அளவு கொண்ட இரு கருப்பைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றில் அழற்சியும், நீர்க் கட்டிகளும் உருவாகியிருந்தன.

இதையடுத்து, மிக நுட்பமான, 'லேப்ரோஸ்கோபி' சிகிச்சை வாயிலாக சிறு துளையிட்டு, கருப்பை சுவர்கள் அகற்றப்பட்டன. தொடர்ச்சியாக, அதனுடன் இணைந்திருந்த பகுதிகளும் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டன. இறுதியில் இரட்டை கருப்பை அகற்றப்பட்டது.

அப்பெண்ணுக்கு, 5 விதமான அறுவை சிகிச்சைகள் மிகத் துல்லியமாக, 3 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக பாதிப்பிலிருந்து அப்பெண் குணமடைந்து, இயல்பு நிலைக்கு திரும்பினார். சிகிச்சைக்கு பின், 48 மணி நேரத்தில் வீடு திரும்பினார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us