/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மரத்தை வெட்டிய காவல் துறை பசுமை ஆர்வலர்கள் அதிருப்தி
/
மரத்தை வெட்டிய காவல் துறை பசுமை ஆர்வலர்கள் அதிருப்தி
மரத்தை வெட்டிய காவல் துறை பசுமை ஆர்வலர்கள் அதிருப்தி
மரத்தை வெட்டிய காவல் துறை பசுமை ஆர்வலர்கள் அதிருப்தி
ADDED : ஜூன் 25, 2025 12:23 AM

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்காக, நிழல் தரும் மரங்களை வெட்டியது, பசுமை ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இயற்கை சீற்றத்தால் பொது இடங்கள், மைதானங்கள், பூங்காக்களில் அமைக்கப்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்து வருகின்றன. மற்றொரு புறம், வளர்ச்சி பணிகளை காரணம் காட்டி, மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததை அடுத்து, புதிதாக சுவர் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிக்கு இடையூறாக மரம் இருப்பதாக கருதி, நிழல் தரும் வகையில் இருந்த துாங்கமூச்சி மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய காவல் துறையின் இச்செயல், பசுமை ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பசுமை ஆர்வலர்கள் கூறியதாவது:
சென்னையில் வளர்ந்த மரங்களை வெட்டக்கூடாது என்பதற்காக, தனியார் நிறுவனங்களே, மரத்தைச் சுற்றி இடைவெளி விட்டு, அதற்கு ஏற்றார்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்கின்றனர்.
அதேபோல் அண்ணா நகரில் உள்ள 'அம்மா' உணவகமும் மரங்களை வெட்டி அகற்றாமல், அதற்கு தகுந்த மாதிரி கட்டடம் கட்டி உள்ளனர்.
அந்த வகையில் சென்னையில் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் வகையில், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர். இந்நிலையில் காவல் துறையினர், நிழல் தரும் மரத்தை வெட்டி அகற்றியுள்ளது கண்டனத்திற்கு உரியது. அதற்கு மாற்றாக, புதிதாக மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.