sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சூலுாரில் இன்று 'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாம்

/

சூலுாரில் இன்று 'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாம்

சூலுாரில் இன்று 'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாம்

சூலுாரில் இன்று 'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாம்


ADDED : ஜூன் 24, 2025 10:34 PM

Google News

ADDED : ஜூன் 24, 2025 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; சூலுார் தாலுகா கிராமங்களில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் இன்று நடக்கிறது.

மக்களை தேடி சென்று, குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும், மூன்றாவது புதன்கிழமை நடக்கும் இந்த முகாம்,சூலுார் தாலுகா கிராமங்களில் இன்று காலை, 9:00 மணிக்கு, துவங்கி நாளை காலை, 9:00 மணி வரை நடக்கிறது.

இதற்கென வருவாய் கிராம வாரியாக தணிக்கை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சூலுாரில் கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆகியோர் கள ஆய்வு செய்கின்றனர். கணியூரில் கூடுதல் கலெக்டரும், இருகூரில் மாவட்ட வருவாய் அலுவலரும் பங்கேற்று கள ஆய்வு செய்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளனர். ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், அதிகாரிகளிடம், மக்கள் தங்கள் குறைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம்.

தொடர்ந்து, மாலை, 4:30 மணிக்கு, கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடக்க உள்ளது. தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், தங்கள் அறிக்கையினை கலெக்டரிடம் அளிக்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us
      Arattai