sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மரக்கன்றுகள் நட்டு மாணவர்கள் பராமரிப்பு

/

மரக்கன்றுகள் நட்டு மாணவர்கள் பராமரிப்பு

மரக்கன்றுகள் நட்டு மாணவர்கள் பராமரிப்பு

மரக்கன்றுகள் நட்டு மாணவர்கள் பராமரிப்பு


ADDED : மார் 25, 2025 09:51 PM

Google News

ADDED : மார் 25, 2025 09:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம்; ஆடுகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அக்ரஹார சாம குளத்தில் மரக்கன்றுகளை சுற்றி மாணவர்கள் சேலை கட்டினர்.

கோவில்பாளையம் அருகே 160 ஏக்கர் பரப்பளவு உள்ள அக்ரஹார சாம குளத்தில், ஏரி பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் கவுசிகா நீர் கரங்கள் சார்பில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. 241வது வாரமாக நேற்று முன்தினம் நடந்த சீரமைப்பு பணியில் கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி, பயோ டெக்னாலஜி துறை மாணவர்கள் 50 பேர் பங்கேற்றனர்.

ஆறடி உயரம் வளர்ந்த பல்வேறு வகை மரக்கன்றுகளை குளத்தை ஒட்டியும் குளக்கரையிலும் நட்டனர். இப்பகுதியில் ஆடுகள் அதிகமாக உள்ளதால் மரக்கன்றுகளை சேதப்படுத்தாமல் இருக்க மரக்கன்றுகளை சுற்றி சிறு கம்புகளை நட்டு அவற்றில் பழைய சேலைகளை கட்டினர். அந்த சேலைகள் மீது சாணத்தை தெளித்தனர்.

இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், 'இந்த பகுதியில் 2000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம். எனினும் சில இடங்களில் ஆடுகள் செடி மற்றும் மரக்கன்றுகளை சேதப்படுத்தாமல் இருக்க மரக்கன்றுகளை சுற்றி சேலை கட்டி வருகிறோம்.

நான்கு நாட்களுக்கு ஒரு முறை அந்த சேலையில் சாணத்தை தெளிக்கிறோம். இதனால் இந்த மரக்கன்றுகளை ஆடுகள் தீண்டுவதில்லை.

களப்பணியில் ஈடுபட விரும்புவோர் 93632 26237 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us