sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மஞ்சப்பை இயந்திரம் பழுது

/

மஞ்சப்பை இயந்திரம் பழுது

மஞ்சப்பை இயந்திரம் பழுது

மஞ்சப்பை இயந்திரம் பழுது


ADDED : மார் 25, 2025 10:00 PM

Google News

ADDED : மார் 25, 2025 10:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. அதையடுத்து, சுற்றுச்சூழல்துறை சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை முன்னெடுத்தது.

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, பொது மக்கள் அதிகம் கூடுமிடங்களில், மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டன. இதில், 10 ரூபாய் நாணயம் அல்லது நோட்டை செலுத்தினால், மஞ்சப்பையை இயந்திரம் வழியாக ஏ.டி.எம்., இயந்திரம் மூலம் பணம் பெறுவதுபோல, மஞ்சப்பை வழங்கப்பட்டது.

அதன்படி, விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில் பொறுத்தப்பட்ட இயந்திரம் ஒரு சில மாதங்களில் பயன்பாடின்றி வீணானது. இது தெரியாத கிராம மக்கள் 10 ரூபாய் செலுத்திவிட்டு, நீண்ட நேரமாகியும் மஞ்சப்பை வரவில்லையே என புலம்பி செல்லும் அவலம் தொடர்கிறது.

எனவே, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் செயல்படாமல் உள்ள மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us