ADDED : மார் 28, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு; சி.என்.பாளையத்தில் மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சி.என்.பாளையம் மாதாகோவில் தெருவை சேர்ந்த அமுதா,55; என்பவர் வீட்டின் பின்புறம் டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தை கண்டுபிடித்தனர்.
போலீசார் வழக்குப் பதிந்து அமுதாவை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.