sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இடைப்பாடி பக்தர்கள் பழநியில் தங்கி தரிசனம்

/

இடைப்பாடி பக்தர்கள் பழநியில் தங்கி தரிசனம்

இடைப்பாடி பக்தர்கள் பழநியில் தங்கி தரிசனம்

இடைப்பாடி பக்தர்கள் பழநியில் தங்கி தரிசனம்


ADDED : பிப் 02, 2024 01:11 AM

Google News

ADDED : பிப் 02, 2024 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:பழநி முருகன் கோயிலில் தைப்பூச விழாவை தொடர்ந்து காவடிகளுடன் வந்த இடைப்பாடி பக்தர்கள் நேற்றிரவு கோயிலில் தங்கி தரிசனம் செய்தனர்

தைப்பூச திருவிழாவையொட்டி சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த பருவதராஜகுல மகாஜன சமுதாய பக்தர்கள் 300 ஆண்டுகளுக்கு மேலாக பழநி கோயிலுக்கு காவடி எடுத்து வருகின்றனர்.

அதன்படி பால், புஷ்பம், சர்க்கரை, இளநீர் காவடிகள் எடுத்து ஆட்டம் பாட்டத்துடன் சேலம்,சென்னிமலை, காங்கேயம், தாராபுரம் வழியாக நேற்று (பிப்.1) பழநி வந்தனர்.

பெரியநாயகி அம்மன் கோயில் வந்து அங்கிருந்து முருகன் கோயில் சென்றனர். முருகன் கோயிலில் சாயரட்சை பூஜையில் தரிசனம் செய்த அவர்களுக்காக 20 டன்னுக்கும் மேல் பஞ்சாமிர்தம் தயார் செய்யப்பட்டது.

நேற்றிரவு அங்கு தங்கி வழிபாட்டனர். இக்கோயிலில் இரவில் தங்கி தரிசனம் செய்ய இச்சமுதாய மக்கள் மட்டும் அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us