sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நிலையற்ற விலையால் மலைப் பூண்டு விவசாயிகள் பாதிப்பு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை

/

நிலையற்ற விலையால் மலைப் பூண்டு விவசாயிகள் பாதிப்பு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை

நிலையற்ற விலையால் மலைப் பூண்டு விவசாயிகள் பாதிப்பு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை

நிலையற்ற விலையால் மலைப் பூண்டு விவசாயிகள் பாதிப்பு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை


ADDED : மார் 26, 2025 05:03 AM

Google News

ADDED : மார் 26, 2025 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைச்சல் காணும் மலைப் பூண்டிற்கு நிலையற்ற விலையால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

இம்மலைப் பகுதியில் ஏராளமான ஏக்கரில் ஆண்டுக்கு இருமுறை மலைப்பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது.மருத்துவ குணம் உள்ள மலைப்பூண்டிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இருந்தும் நிலையற்ற விலையால் விவசாயிகள் ஆண்டுதோறும் பாதிக்கப்படும் நிலை தொடர்கிறது. 2024ல் விளைச்சல் பாதிப்பால் கிலோ ரூ. 700 விலை கிடைத்தது. நல்ல விலை கிடைத்ததால் நடப்பாண்டில் கூடுதல் பரப்பில் பூண்டு சாகுபடி செய்யப்பட்டது.

இதனிடையே வழக்கத்திற்கு மாறாக நடப்பாண்டில் துவக்கத்திலே கிலோ ரூ. 200 ஆக விலை சரிவடைந்தது. செய்வதறியாது விவசாயிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெயரளவிற்கே புவிசார் குறியீடு பெற்ற போதும் நிலையற்ற விலை நீடிப்பதால் விவசாயிகள் ஆண்டுதோறும் நிம்மதியை இழக்கின்றனர்.இங்கு விளைச்சல் காணும் மலைப் பூண்டை பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் விற்பனைக்கு அனுப்பும் சூழல் நீடிப்பதால் தங்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாக மாற ஒருங்கிணைந்த வேளாண் விற்பனை கூடம் மூலம் விற்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது. இதுவும் பாதியில் கைவிடப்பட்டது. தொடர்ந்து பூண்டு பதப்படுத்துதல் , புகை ஊட்டும் மையம் பூண்டியில் ரூ. 8.50 கோடி ரூபாயில் சில ஆண்டுகளுக்கு முன் கட்டமைக்கப்பட்டும் அவையும் பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக விவசாயிகளுக்கு கை கொடுக்கும் பூண்டு விவசாயம் தத்தளித்து வருகிறது.

விவசாயி கோபால் கூறுகையில்,'' தங்களின் வாழ்வாதாரமாக உள்ள மலைப்பூண்டு சாகுபடிக்கு அரசு திட்டங்களை அறிவித்த போதும் தங்களுக்கு அவை பயனுள்ளதாக அமையவில்லை. மாறாக ஆண்டுதோறும் விலை வீழ்ச்சி ,விளைச்சல் பாதிப்பு,சீதோஷ்ண நிலை மாற்றம் என ஏராளமான பிரச்னைகளை சந்தித்து வருகின்றோம். புவிசார் குறியீடு பெற்ற நிலையிலும் தங்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. 2024ல் நீடித்த விலை தற்போது இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இதை நிரந்தர படுத்தவும் ,சந்தைப்படுத்துதல் ,பதப்படுத்துதல் மதிப்பு கூட்டு பொருள் உள்ளிட்டவற்றிற்கு அரசு கை கொடுக்க வேண்டும்''என்றார்.

தீர்வு : கொடைக்கானலில் விளைச்சல் காணும் மலைப்பூண்டிற்கு புவிசார் குறியீடு பெற்ற அங்கீகாரம் அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையில் வழிமுறைகளை எளிமை படுத்த வேண்டும்.விளைச்சல் குறைவான தருணங்களில் வட மாநிலங்கள் போன்று பூண்டிற்கு ஆதாரமான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும்.மதிப்பு கூட்டு பொருள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி ,சந்தைப்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.தனிப்பட்ட விவசாயிகள் மதிப்பு கூட்டு பொருள் உற்பத்தி செய்ய பயிற்சி மற்றும் அதற்கான சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட வழிமுறைகளை அரசு நேரடியாக கையாள வேண்டும்.ஒருங்கிணைந்த வேளாண் விற்பனை கூடம் , பதப்படுத்தும் மையங்களை ஒழுங்கு படுத்தினால் மலைப்பூண்டு விவசாயத்திற்கு புத்துயிர் பெறும்.






      Dinamalar
      Follow us