sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கஸ்டமரை தாக்கிய ஊழியர்கள்; பி.ஆர்.சி., மெட்டல் மார்ட் முற்றுகை

/

கஸ்டமரை தாக்கிய ஊழியர்கள்; பி.ஆர்.சி., மெட்டல் மார்ட் முற்றுகை

கஸ்டமரை தாக்கிய ஊழியர்கள்; பி.ஆர்.சி., மெட்டல் மார்ட் முற்றுகை

கஸ்டமரை தாக்கிய ஊழியர்கள்; பி.ஆர்.சி., மெட்டல் மார்ட் முற்றுகை


ADDED : மார் 26, 2025 01:44 AM

Google News

ADDED : மார் 26, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கஸ்டமரை தாக்கிய ஊழியர்கள்; பி.ஆர்.சி., மெட்டல் மார்ட் முற்றுகை

சத்தியமங்கலம்,சத்தியமங்கலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகில், பி.ஆர்.சி., மெட்டல் மார்ட் செயல்படுகிறது. சத்தி அருகே ஜல்லியூரை சேர்ந்த கனகராஜ், சில நாட்களுக்கு முன், 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இங்கு பிரிட்ஜ் வாங்கியுள்ளார்.

கடை தொழிலாளர்கள் வீட்டில் டெலிவரி செய்துள்ளனர். இந்நிலையில் பிரிட்ஜ் அடிபட்டுள்ளதாக கடைக்கு தகவல் தெரிவித்த நிலையில், கடைக்கு நேற்று நேரில் சென்றுள்ளார். அப்போது மேனேஜர் லிங்கம், சூப்பர்வைசர் அருண், மெக்கானிக் சந்திர பிரபாகரன் ஆகியோருடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இருதரப்பிலும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதையறிந்த ஜல்லியூர் பகுதி மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், நேற்றிரவு, ௮:௦௦ மணிக்கு கடைக்கு வந்து, கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சத்தி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்தை கடந்து பேச்சுவார்த்தை நீடித்ததால், சாலையில் போக்குவரத்து பாதித்தது. கடை உரிமையாளர் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கவே, 9:20 மணிக்கு மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us