sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருக்கோவிலுார் அணைக்கட்டு புனரமைப்பு மணலுார்பேட்டையில் புதிய அணைக்கட்டு விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

/

திருக்கோவிலுார் அணைக்கட்டு புனரமைப்பு மணலுார்பேட்டையில் புதிய அணைக்கட்டு விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

திருக்கோவிலுார் அணைக்கட்டு புனரமைப்பு மணலுார்பேட்டையில் புதிய அணைக்கட்டு விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

திருக்கோவிலுார் அணைக்கட்டு புனரமைப்பு மணலுார்பேட்டையில் புதிய அணைக்கட்டு விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி


ADDED : மார் 26, 2025 05:00 AM

Google News

ADDED : மார் 26, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : நீர்வளத்துறை மானிய கோரிக்கையில் திருக்கோவிலுார் அணைக்கட்டை புனரமைத்தல் மற்றும் மணலுார்பேட்டையில் புதிய அணைக்கட்டு அமைக்கும் அறிவிப்புக்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திருக்கோவிலுார் அடுத்த மருதுார் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. பம்பை வாய்க்கால், மலட்டாறு, ராகவன் வாய்க்கால் என ஐந்து பாசன கால்வாய்களுக்கு நீர் திருப்பி விடப்படுகிறது.

இதன் மூலம் பல நுாறு ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த அணை பெஞ்சல் புயல் வெள்ளத்தில் பெருமளவில் சேதமடைந்தது.

இதனை புனரமைத்து சீரமைப்பதற்கு விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ. 130 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியானது.

இதேபோல் மணலுார்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் ஏற்கனவே உள்ள மூன்று கால்வாய்கள் மூலம் தண்ணீர் வழங்க ஏதுவாக புதிதாக அணைக்கட்டை உருவாக்க ரூ. 75 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

திருக்கோவிலுார் அணைக்கட்டின் மூலம் விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்ட விவசாயிகள் பெருமளவில் பயனடையும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவதற்கு ஏதுவாக மணலுார்பேட்டையில் புதிதாக அணைக்கட்ட அறிவிப்பு வெளியிட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை வரவேற்று திருக்கோவிலுார் மற்றும் மணலுார்பேட்டையில் தி.மு.க., வினர் மற்றும் விவசாயிகள் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.






      Dinamalar
      Follow us