/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உதவி திட்ட அலுவலர் பொறுப்பேற்பு
/
உதவி திட்ட அலுவலர் பொறுப்பேற்பு
ADDED : ஜூன் 27, 2025 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்ட வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு, புதிய உதவி திட்ட அலுவலர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தர்மபுரி மாவட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலராக மணிவண்ணன் பணிபுரிந்து வந்தார். அவருக்கு, உதவி இயக்குநர் அந்தஸ்தில், ஊரக வளர்ச்சி துறை பதவி உயர்வு அளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு, உதவி திட்ட அலுவலராக அத்துறை நிர்வாகம் நியமித்துள்ளது.
அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.