sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பென்னலுார், கடுவஞ்சேரியில் குடிநீர் தொட்டிகள் திறப்பு

/

பென்னலுார், கடுவஞ்சேரியில் குடிநீர் தொட்டிகள் திறப்பு

பென்னலுார், கடுவஞ்சேரியில் குடிநீர் தொட்டிகள் திறப்பு

பென்னலுார், கடுவஞ்சேரியில் குடிநீர் தொட்டிகள் திறப்பு


ADDED : ஜூன் 27, 2025 11:06 PM

Google News

ADDED : ஜூன் 27, 2025 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதி, 1.60 கோடி ரூபாய் மதிப்பில், பென்னலுார் மற்றும் கடுவஞ்சேரி ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறக்கப்பட்டன.

பென்னலுார் ஊராட்சியில், 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. அதேபோல, கடுவஞ்சேரி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

மக்கள் தொகைக்கு ஏற்றார்போல, குடிநீர் வசதி இல்லாததால், குடிநீர் தட்டுபாடு நிலவி வந்தது.

இதனால், புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித்தர வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, ஹூண்டாய் நிறுவனத்தின், சமூக பொறுப்பு நிதியின் கீழ், 1.60 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன் படி, பென்னலுார் ஊராட்சியில், 1.15 கோடி மதிப்பில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றம் கடுவஞ்சேரி ஊராட்சியில் 45 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு உள்ளன.

இதை, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார்.






      Dinamalar
      Follow us