sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 28, 2025 ,புரட்டாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வீடு கட்டாத 211 பேரிடம் பணம் வசூலிக்கும் பணி திணிப்பு காஞ்சிபுரம் ஊராட்சி தலைவர்கள் புலம்பல் 

/

வீடு கட்டாத 211 பேரிடம் பணம் வசூலிக்கும் பணி திணிப்பு காஞ்சிபுரம் ஊராட்சி தலைவர்கள் புலம்பல் 

வீடு கட்டாத 211 பேரிடம் பணம் வசூலிக்கும் பணி திணிப்பு காஞ்சிபுரம் ஊராட்சி தலைவர்கள் புலம்பல் 

வீடு கட்டாத 211 பேரிடம் பணம் வசூலிக்கும் பணி திணிப்பு காஞ்சிபுரம் ஊராட்சி தலைவர்கள் புலம்பல் 


ADDED : ஜூன் 24, 2025 10:55 PM

Google News

ADDED : ஜூன் 24, 2025 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்ட முடியாத, 211 பயனாளிகளிடம் பணம் வசூலிக்கும்படி ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்துள்ளனர்.

பணம் செலுத்த முடியாத பயனாளிகளுக்கு பதிலாக, ஊராட்சி தலைவர் பணம் வசூலித்து கொடுக்க வேண்டும் என, பொறுப்பு திணிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.

கான்கிரீட் வீடு அல்லாதவர்களுக்கு, 2016 - 17ம் நிதி ஆண்டு முதல், 2021 - 22ம் நிதி ஆண்டு வரையில், பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், 11,650 நபர்களுக்கு வீடு கட்டும் ஆணை வழங்கப்பட்டு உள்ளன.

அனுமதி


ஒவ்வொரு வீடு கட்டும் பயனாளிகளும், தலா, 2.40 லட்சம் ரூபாய் செலவில், கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொள்ளலாம். இதில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 90 நாட்களுக்கு, 100 நாள் வேலை செய்து கொள்ளலாம் என, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர, துாய்மை பாரத இயக்கத்தில், தனி நபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு, 12,000 ரூபாய் அரசு கூடுதலாக ஒதுக்கீடு செய்து கொடுக்கிறது.

இது போன்ற சலுகைகள் இருந்தும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 12,189 வீடுகளுக்கு, 9,966 வீடு மட்டுமே கட்டுமான பணிகளை நிறைவு செய்துள்ளனர்.

இதில், 530 நபர்கள் வீடுகள் கட்டவில்லை என, ஊரக வளர்ச்சி துறை பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்களின் கள ஆய்வு வாயிலாக தெரிய வந்துள்ளன.

இதுபோன்ற வீடு கட்டும் பணியாளர்களுக்கு, விரைந்து வீடு கட்டுமான பணிகளை முடித்து கொடுக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சி துறையினர் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த விழிப்புணர்வுக்கு பின், 319 நபர்கள் வீடு கட்ட முன் வந்துள்ளனர். இதில், 211 நபர்கள் வீடு கட்டுவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என, தெரிய வந்துள்ளது. இது போன்ற நபர்களுக்கு வீடு கட்டும் ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வீடு கட்ட முடியாத பயனாளிகளிடம் இருந்து, அரசு பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்திய பணம் திரும்ப பெறுவதற்கு ஊரக வளர்ச்சி துறை முனைப்பு காட்டி வருகின்றனர்.

நேரடியாக பயனாளிகளித்திலும், கட்ட முடியாத பயனாளிகளின் பணத்தை, அந்தந்த ஊராட்சி நிர்வாகத்திடம் கூறி, அந்தந்த ஊராட்சி செயலர் வசூலித்து கொடுக்க வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பயனாளிகள் செலுத்தவில்லை எனில், ஊராட்சி செயலர்கள், ஊராட்சி தலைவர்கள் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத வாலாஜாபாத் வட்டார ஊராட்சி தலைவர் ஒருவர் கூறியதாவது:

வீடு கட்டும் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செல்கிறது. பயனாளி வீடு கட்டவில்லை எனில், அரசு வழங்கிய பணம் அவரிடமே நேரடியாக வசூலிக்கலாம்.

முறைகேடு


இதற்கு, ஊராட்சி தலைவர் எப்படி பொறுப்பேற்று அவர் பெற்ற பணத்தை செலுத்த முடியும். இது, முறைகேடு செய்ய வழி வகுக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், 530 வீடுகள் நிலுவையில் உள்ளன. இதில், 211 வீடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 211 வீடுகள் ஜன்னல் வரையில் கட்டியுள்ளனர். மேலும், 107 நபர்கள் தளம் போடப்பட்டு உள்ளனர்.

ரத்து செய்யப்பட்ட 211 பயனாளிகளிடம் இருந்து, அரசு பணத்தை பெற, பயனாளிகள் செலுத்த வேண்டும் என, கேட்கப்பட்டுள்ளது.

பணம் செலுத்த இயலாத பயனாளிகளுக்கு பதிலாக, ஊராட்சி தலைவர் வசூலித்து செலுத்த வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்த ஒரு நிபந்தனையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us