sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தைப்பூச திருவிழா ஆலோசனை கூட்டம் ஜாதி, அரசியல் சார்ந்த பனியன் அணிய தடை

/

தைப்பூச திருவிழா ஆலோசனை கூட்டம் ஜாதி, அரசியல் சார்ந்த பனியன் அணிய தடை

தைப்பூச திருவிழா ஆலோசனை கூட்டம் ஜாதி, அரசியல் சார்ந்த பனியன் அணிய தடை

தைப்பூச திருவிழா ஆலோசனை கூட்டம் ஜாதி, அரசியல் சார்ந்த பனியன் அணிய தடை


ADDED : ஜன 21, 2024 12:42 PM

Google News

ADDED : ஜன 21, 2024 12:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவில் தைப்பூச திருவிழா ஆலோசனை கூட்டம் நேற்று காலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ரவி தலைமையில் நடைபெற்றது.

ஹிந்து சமய அறநிலைய துறை மாவட்ட உதவி ஆணையர் ஜெயதேவி, தாசில்தார் மகுடேஸ்வரன், கோவில் செயல் அலுவலர் சந்திரமோகன், நகராட்சி கமிஷனர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வரும், 25 மாலை, 5:00 முதல் 6:00 மணிக்குள் காவிரி நதியில் தீர்த்தவாரி திட்டமிட்டப்படி நடைபெற வேண்டும். சுவாமிகளை துாக்கி வரும் பொது மக்கள் சமுதாயம், மற்றும் அரசியல் சார்ந்த பனியன், சட்டை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை கோவில் செயல் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். காவிரி படுகையில் சுவாமிகள் சந்திப்பு மற்றும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் இடம் ஆகிய இடங்களில் அடிப்படை வசதிகள் செய்தல், குற்றச்செயல்கள் தடுக்க 'சிசிடிவி' கேமரா பொருத்துதல், தைப்பூசம் சிறப்பாக நடைபெற அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் வருவாய், பொதுப்பணி, மின் வாரியம், நெடுஞ்சாலை, பொது சுகாதாரம், தீயணைப்பு, போலீஸ் ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள், எட்டு கோவில் செயல் அலுவலர்கள், சிவாச்சாரியார்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us