ADDED : ஜூன் 22, 2024 02:48 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த தாவரக்கரை அருகே ஒசட்டியை
சேர்ந்தவர் மாதப்பா மனைவி ஜெயம்மா, 65, கூலித்தொழிலாளி; இவர் தனக்கு
பழக்கமான தேன்கனிக்கோட்டை நேதாஜி ரோட்டை சேர்ந்த நகை பாலீஸ் போடும்
தொழில் செய்யும் கார்த்திக், 39, என்பவரிடம் மூன்று ஆண்டுக்கு முன்
தனது, 8 பவுன் நகையை கொடுத்து அடகு வைத்து, அதில் கிடைக்கும் பணத்தை
வைத்து வீடு கட்டி கொடுக்கமாறு கேட்டார்.
அதேபோல் நகையை அடகு வைத்து
கிடைத்த பணத்தை வைத்து, கார்த்திக் வீட்டையும் கட்டி கொடுத்துள்ளார்.
அதன் பின் நகையை மீட்டு தருமாறு கூறி, 2 லட்சம் ரூபாயை ஜெயம்மா,
கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி சென்ற அவர், நகையை
மீட்டு கொடுக்காமல் மூன்று ஆண்டுகளாக ஏமாற்றி வந்தார்.
தேன்கனிக்கோட்டை போலீசில் ஜெயம்மா நேற்று கொடுத்த புகார்படி, மோசடி
வழக்குப்பதிந்து கார்த்திக்கை போலீசார் தேடி வருகின்றனர்.