sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெவ்வேறு இடங்களில் விபத்து சிறுவன் உட்பட 3 பேர் பலி

/

வெவ்வேறு இடங்களில் விபத்து சிறுவன் உட்பட 3 பேர் பலி

வெவ்வேறு இடங்களில் விபத்து சிறுவன் உட்பட 3 பேர் பலி

வெவ்வேறு இடங்களில் விபத்து சிறுவன் உட்பட 3 பேர் பலி


ADDED : செப் 12, 2025 01:06 AM

Google News

ADDED : செப் 12, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் துஷார் துபி, 21. ஓசூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த, 5 இரவு, ஹோண்டா சைன் பைக்கில் தொரப்பள்ளி அருகே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். ஓசூர் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

* போச்சம்பள்ளி அடுத்த தாதம்பட்டியை சேர்ந்தவர் திருவேங்கடம், 70. நீர்வளத்துறையில் ஒப்பந்த தொழிலாளராக இருந்தார். நேற்று முன்தினம் யமஹா கிரக்ஸ் பைக்கில் சென்றார். காலை, 10:00 மணியளவில், ஊத்தங்கரை அடுத்த கொரப்பநாயக்கம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த ஸ்பிளண்டர் பைக் மோதி பலியானார். கல்லாவி போலீசார், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சேர்ந்த விஷ்ணு, 21, என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

* கிருஷ்ணகிரி அடுத்த சென்னசந்திரத்தை சேர்ந்த சிறுவன் சந்தோஷ், 16. இவர் கடந்த, 9ல், ஹோண்டா சைன் பைக்கில் சென்றுள்ளார். இரவு, 8:45 மணியளவில் குருபரப்பள்ளி சாலையில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த பிக்கப்வேன் மோதி பலியானார். குருபரப்பள்ளி போலீசார் பிக்கப் டிரைவரான, சென்னசந்திரத்தை சேர்ந்த, ஹரி 35, என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us