நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாநகராட்சி சார்பில் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், பசுமலை பகுதிகளில் நகர்ப்புற மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான பூமி பூஜை மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர்கள் பாண்டிச்செல்வி, சுவிதா, உதவி கமிஷனர்கள் சுரேஷ்குமார், எஸ்.சுரேஷ்குமார், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் பூபதி, சுகாதார அலுவலர் வீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

