/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விவசாய தொழில் முனைவோராக இலவச பயிற்சி
/
விவசாய தொழில் முனைவோராக இலவச பயிற்சி
ADDED : ஜூன் 15, 2025 06:57 AM
மதுரை : மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையம் (சி.இ.,டி.,), மகபூப்பாளையம் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனத்தில் (சிப்போ) 45 நாட்களுக்கான விவசாய தொழில்முனைவோர் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
விவசாயம், தாவர வியல், விலங்கியல், வேதியியல், வேளாண் கலை, தோட்டக்கலை, சுற்றுச்சூழல் அறிவியல், உணவு தொழில்நுட்பம், மீன்வளம், பி.இ., வேளாண் பொறியியல், வேளாண் டிப்ளமோ முடித்த 60 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். காளான் வளர்ப்பு, பால் பண்ணை, மீன்பண்ணை, தேனீ வளர்ப்பு, கோழிப்பண்ணை, ஆடு வளர்ப்பு, காய்கறி சாகுபடி, காய்கறி, பழங்கள் பதப்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சிக்கு பின் வேளாண் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.ஒரு கோடி வரை வங்கிக்கடன், பொதுப்பிரிவினருக்கு நபார்டு வங்கி மானியமாக 36 சதவீத மானியம், எஸ்.சி., எஸ்.டி., பெண்களுக்கு 44 சதவீத மானியம் உண்டு. பயிற்சியின் போது உணவு, தங்குமிடம் இலவசம்.
பங்கேற்க விரும்புபவர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை, கல்விச்சான்றிதழ், பான் கார்டு நகலுடன் வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு சி.இ.டி., அலுவலகத்தை 94860 19477, சிப்போ அலுவலகத்தை 78715 55825ல் தொடர்பு கொள்ளலாம்.