sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நிலையூர் கால்வாயில் கொட்டிய கழிவுகள்

/

நிலையூர் கால்வாயில் கொட்டிய கழிவுகள்

நிலையூர் கால்வாயில் கொட்டிய கழிவுகள்

நிலையூர் கால்வாயில் கொட்டிய கழிவுகள்


ADDED : ஜூன் 25, 2025 04:29 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 04:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் செல்லும் நிலையூர் கால்வாய்களில் செடி, கொடிகள், பிளாஸ்டிக் கழிவுகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

பாணாங்குளம் கண்மாய்க்கு வைகை அணை தண்ணீர் செல்லும் நிலையூர் கால்வாயில் விளாச்சேரியில் இருந்து ஹார்விபட்டி வரையான பகுதிகளில் செடிகள் வளர்ந்து நிற்கின்றன. இந்த கால்வாய் பகுதியை ஒட்டி வசிப்போர், குடியிருப்புகளில் சேரும் குப்பையை கால்வாய்க்குள் கொட்டுகின்றனர். இதனால் கால்வாய்க்குள் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் கிடக்கிறது.

கால்வாய் தடுப்புச்சுவரை உயர்த்தும் பணிகள் நடக்கிறது. அதனால் கால்வாயை ஒட்டி இருந்த மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டன. வெட்டிய கிளைகளை கால்வாய்க்கால் போட்டுச் சென்றுள்ளனர். இவை அழுகி விரைவில் துர்நாற்றம் எடுக்கும்.

வைகை அணையில் தண்ணீர் திறப்பதற்கு முன்பாக இந்தச் செடி, கொடிகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us
      Arattai