sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தி.கோட்டில் பாதையோர கடை அமைக்க 9 இடங்கள் அறிவிப்பு

/

தி.கோட்டில் பாதையோர கடை அமைக்க 9 இடங்கள் அறிவிப்பு

தி.கோட்டில் பாதையோர கடை அமைக்க 9 இடங்கள் அறிவிப்பு

தி.கோட்டில் பாதையோர கடை அமைக்க 9 இடங்கள் அறிவிப்பு


ADDED : செப் 25, 2025 02:23 AM

Google News

ADDED : செப் 25, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு :திருச்செங்கோட்டில், பண்டிகை காலங்களில் நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தஆலோசனை கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தார். கமிஷனர் வாசுதேவன், திருச்செங்கோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நடைபாதை வியாபாரிகள், புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், வாலரைகேட், ஈரோடு ரோடு வாரச்சந்தை அருகில், சங்ககிரி ரோடு பட்டறை மேடு பகுதி, உழவர் சந்தை, நாமக்கல் ரோடு அண்ணா பூங்கா, சந்தைப்பேட்டை, சீதாராம்பாளையம் ஆகிய, ஒன்பது இடங்களில் மட்டும் கடைகள் போட்டு வியாபாரம் செய்துகொள்ளலாம்.

அரசு தலைமை மருத்துவமனை அருகில், பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை அருகில், ஆனங்கூர் ரோடு எம்.எல்.ஏ., தொகுதி அலுவலக சாலை, ஈரோடு ரோடு பயணியர் மாளிகை, சேலம் ரோடு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பழைய சேலம் ரோடு சின்னபாவடி சந்து, கொக்கராயன்பேட்டை ரோடு ஆகிய, எட்டு இடங்களில் பாதை ஓரத்தில் கட்டாயமாக கடைகள் போட்டு விற்பனை செய்ய கூடாது.

மேலும், பாதையோர கடைகள் போட்டு வியாபாரம் செய்பவர்கள், நிர்ணயிக்கப்பட்ட வியாபார கட்டணத்தை நகராட்சியில் செலுத்தி விண்ணப்பித்து வியாபார சான்று மற்றும் அடையாள அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கபட்டது.






      Dinamalar
      Follow us