/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் தாலுகா முழுவதும் கூட்டு குடிநீர் சோதனை ஓட்டம்
/
ராசிபுரம் தாலுகா முழுவதும் கூட்டு குடிநீர் சோதனை ஓட்டம்
ராசிபுரம் தாலுகா முழுவதும் கூட்டு குடிநீர் சோதனை ஓட்டம்
ராசிபுரம் தாலுகா முழுவதும் கூட்டு குடிநீர் சோதனை ஓட்டம்
ADDED : ஜூன் 25, 2025 01:27 AM
ராசிபுரம், ராசிபுரம் நகராட்சி மற்றும் ராசிபுரம், வெண்ணந்துார், நாமகிரிப்பேட்டை ஒனன்றியங்களில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் பெரும்பாலான கிராமங்களில் இப்பணி முடிந்துவிட்டது. இதையடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றி குடிநீர் இணைப்புகளில் தண்ணீ வினியோகம் செய்யும் பணி சோதனையோட்ட முறையில் நடந்து வருகிறது. ராசிபுரம் தாலுகாவில் மட்டும், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சோதனையோட்டம் நடந்துள்ளது.
ராசிபுரம் நகராட்சி பகுதியில், 99 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இறுதிக்கட்ட பணியாக, ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்டின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே மெயின் வால்வு அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக, ஐந்து நாட்கள் நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இப்பணி, இரண்டு வாரங்களுக்கு முன் முடிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோக சோதனை ஓட்டம் தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக சோதனையோட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்பணி வெற்றிகரமாக முடிந்து விட்டதாக அதிகாரிகள் உறுதிபடுத்தியபின், உடனடியாக புதிய கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் தொடங்கும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய கூட்டு குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் நகராட்சி முழுவதும் தடையின்றி போதுமான அளவு தண்ணீர் கிடைக்கும் என, பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.