sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாராயம் விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

/

சாராயம் விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சாராயம் விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சாராயம் விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


ADDED : செப் 23, 2025 02:04 AM

Google News

ADDED : செப் 23, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், திருச்செங்கோடு அடுத்த அணிமூர் பகுதியில் சாராயம் விற்பதாக, திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையில் சோதனை நடத்திய போலீசார், 8.5 லிட்டர் சாராயம், 60 லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், சாராயம் கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட டூவீலரும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அணிமூரை சேர்ந்த சுப்பிரமணி, 43, சின்னப்பன்காடு பகுதியை சேர்ந்த தங்கவேல், 72, ஆகிய, இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் எஸ்.பி., விமலா, கூடுதல் எஸ்.பி., தனராசு (மதுவிலக்கு) ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து, கலெக்டர் துர்காமூர்த்தி, கைதான சுப்பிரமணி, தங்கவேல் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான ஆணையை, மது

விலக்கு போலீசார் அவர்களிடம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us