sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

எஸ்.எஸ்.வி.எம்., பள்ளிகளில் யோகா நிகழ்ச்சிகள்

/

எஸ்.எஸ்.வி.எம்., பள்ளிகளில் யோகா நிகழ்ச்சிகள்

எஸ்.எஸ்.வி.எம்., பள்ளிகளில் யோகா நிகழ்ச்சிகள்

எஸ்.எஸ்.வி.எம்., பள்ளிகளில் யோகா நிகழ்ச்சிகள்


ADDED : ஜூன் 24, 2024 12:27 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் சரஸ்வதி வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களுக்கு உட்பட்ட, பள்ளிகளில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பில் உள்ள சரஸ்வதி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் யோகா தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் மணிமேகலை மோகன் தலைமை வகித்தார். செயலாளர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். யோகா பயிற்சியில் மாணவ, மாணவியர் பங்கேற்று, யோகா செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் மணிமேகலை மோகன் பேசுகையில், 'யோகா பயிற்சி செய்வதால், உடல் ஆரோக்கியம் பெறுகிறது. மேலும் மனதை ஒருநிலைப்படுத்தும் ஆற்றல் கிடைக்கும். தினமும் யோகா செய்து வந்தால், நினைவாற்றல் அதிகரிக்கும்,' என்றார். இதில் ஆறாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர் பங்கேற்று, யோகாசனங்களை செய்தனர்.

அதேபோன்று மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்., மெட்ரிக் பள்ளியிலும், யோகா தின நிகழ்ச்சிகள் நடந்தன.






      Dinamalar
      Follow us
      Arattai