sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

பத்திரிக்கையாளர் மீது உருட்டு கட்டை தாக்குதல்

/

பத்திரிக்கையாளர் மீது உருட்டு கட்டை தாக்குதல்

பத்திரிக்கையாளர் மீது உருட்டு கட்டை தாக்குதல்

பத்திரிக்கையாளர் மீது உருட்டு கட்டை தாக்குதல்


ADDED : ஜூன் 09, 2025 07:17 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை; புதுக்கோட்டையில் வீடு புகுந்து செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய, சமூக விரோத கும்பலில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டையில், மாலைமலர் நாளிதழ் மாவட்ட செய்தியாளராக, மனோகர், 54, என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நரிமேடு பகுதியில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாடு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

அதே பகுதியில், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஒரு கும்பலுக்கு அப்பகுதியில், வீடு வாடகைக்கு கொடுக்க சிலர் மறுத்துள்ளனர். இதற்கு மனோகர் தான் காரணம் என தவறுதலாக புரிந்துள்ளனர். இந்நிலையில், அந்த கும்பலை சேர்ந்த 5 பேர் நேற்றுமுன் தினம் மனோகர் வீட்டிற்குள் புகுந்து உருட்டு கட்டைகளை கொண்டு மனோகர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், படுகாயம் அடைந்த மனோகர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். புகாரின்படி, திருக்கோணம் போலீசார், இருவரை கைது செய்தனர். மேலும், மூவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us