/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
கழிப்பறை பணி முடியாததால் மாணவர்கள் சாலை மறியல்
/
கழிப்பறை பணி முடியாததால் மாணவர்கள் சாலை மறியல்
ADDED : ஜூன் 05, 2025 02:38 AM

புதுக்கோட்டை:ஆலங்குடி அருகே கடுக்காக்காட்டில் பள்ளி மாணவ - மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கடுக்காக்காட்டில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 94 பள்ளி மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
இந்த பள்ளியில் புதிய கழிப்பறைகள் கட்டப்படுகிறது. கடந்த 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கட்டப்பட்டு வரும் புதிய கழிப்பறை பணிகள் நிறைவடையாததால், மாணவ - மாணவியர் சிரமம் அடைந்தனர்.
இதுகுறித்து, மாணவர்கள், தங்கள் பெற்றோர்களிடம் கூறினர்.
இதனால், ஆத்திரம்அடைந்த பெற்றோர், நேற்று தங்களது குழந்தைகளுடன் வெட்டன்விடுதி -- கருக்காக்குறிச்சி சாலையில் கடுக்காக்காட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வடகாடு போலீசார், அவர்களுடன் பேச்சு நடத்தினர். 15 நாட்களில் கழிப்பறை பணிகள் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், வெட்டன்விடுதி -- கருக்காக்குறிச்சி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.