ADDED : செப் 19, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்,: தாரமங்கலம் அருகே கோழிக்காட்டானுாரை சேர்ந்த கட்டட தொழிலாளி அலமேலு, 65. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, கோழிக்காட்டானுார் பஸ் ஸ்டாப் அருகே சாலை ஓரம் நின்றிருந்தார்.
அப்போது ஜலகண்டாபுரம் பக்கமிருந்து, 'சைன்' பைக்கில் வந்தவர் மோதியதில், மூதாட்டி படுகாயம் அடைந்தார்.மக்கள் அவரை மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக, மருத்துவர் தெரிவித்தார். அலமேலு மருமகன் கந்தசாமி புகார்படி தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

