ADDED : செப் 19, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, கெங்கவல்லி, கோனேரிப்பட்டியில் உள்ள துாய சலேத் அன்னை ஆலய தேர் திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று நவநாள் திருப்பலி, ஆத்துார் உதவி பங்குத்தந்தை பிரான்சிஸ்சேவியர் தலைமையில் நடந்தது. இன்று காலை, 8:30 மணிக்கு, கூட்டுத்திருப்பலி, மாலை, 5:00 மணிக்கு மேல், தேர்பவனி நடக்கிறது. இரவு, 7:30 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.

