sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தனி பட்டா கேட்டு மொபைல் கோபுரத்தில் ஏறி தொழிலாளி மிரட்டல்

/

தனி பட்டா கேட்டு மொபைல் கோபுரத்தில் ஏறி தொழிலாளி மிரட்டல்

தனி பட்டா கேட்டு மொபைல் கோபுரத்தில் ஏறி தொழிலாளி மிரட்டல்

தனி பட்டா கேட்டு மொபைல் கோபுரத்தில் ஏறி தொழிலாளி மிரட்டல்


ADDED : செப் 20, 2025 01:22 AM

Google News

ADDED : செப் 20, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆத்துார், கீரிப்பட்டி, முக்கோணம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 50. கூலித்தொழிலாளியான இவர் உள்பட உறவினர்கள், 5 பேருக்கு, 320 சதுரடி இடம் உள்ளது.

பழனிசாமி, தனி பட்டா வழங்க, கீரிப்பட்டி வி.ஏ.ஓ., அங்கமுத்துவிடம் நேற்று கோரினார். அதற்கு வி.ஏ.ஓ., 'மற்ற, 4 பேரிடமும் கையெழுத்து பெற்று வந்தால்தான், நில அளவீடு செய்து, தனி பட்டா வழங்க முடியும்' என்றார்.

இதனால் ஆத்திரமடைந்த பழனிசாமி, மதியம், 2:10 மணிக்கு, அதே பகுதியில் உள்ள, 150 அடி உயர தனியார் மொபைல் போன் டவர் மீது ஏறினார். தொடர்ந்து தனி பட்டா வழங்கவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார்.

மக்கள், மல்லியக்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற போலீசார், 50 அடி உயரத்துக்கு சென்று, பழனி

சாமியை, இறங்கி வரும்படி கூறினர். அவர், 'தனி பட்டா வழங்க வேண்டும்' என்றார். போலீசார், 'வருவாய்த்துறையினரிடம் பேசியுள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்' என்றனர். பின் மதியம், 2:50 மணிக்கு, பழனிசாமி இறங்க, போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.

பின் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து தொழிலாளியை அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us