sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

'தி.மு.க., அணியில் பிளவு என பொய் பிரசாரம்'

/

'தி.மு.க., அணியில் பிளவு என பொய் பிரசாரம்'

'தி.மு.க., அணியில் பிளவு என பொய் பிரசாரம்'

'தி.மு.க., அணியில் பிளவு என பொய் பிரசாரம்'


ADDED : ஜூன் 30, 2025 11:43 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 11:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: தி.மு.க., கூட்டணியில் பிளவு என்பது போல, பொய் பிரசாரம் நடத்தப்படுவதாக உயர்கல்வி துறை அமைச்சர் செழியன் கூறினார்.

கும்பகோணத்தில், அவர் அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணி யாராலும் பிரிக்க முடியாத, அசைக்க முடியாத லட்சிய கூட்டணி. தேர்தலுக்கு கூடுவோம், பின் பிரிந்து கொள்வோம் என்பது, தி.மு.க., கூட்டணிக்கு பொருந்தாது. எதிர் கூட்டணி, ஒற்றுமை இன்றி, யார் யாரோடு சேர்வது என்ற நிலை இல்லாததால், தி.மு.க., கூட்டணியில் பிளவு என்பது போல இட்டுகட்டி பொய் பிரசாரம் செய்கின்றனர்.

தேர்தலில், இரண்டாவது இடம் யாருக்கு? பா.ஜ.,வுக்கா, அ.தி.மு.க.,வுக்கா, நாம் தமிழர் கட்சிக்கா, த.வெ.க.,வுக்கா என பிரச்னை நிலவுகிறது.

தமிழக கல்லுாரிகளின் காலி பணியிடங்களில், கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். நிரந்தர பேராசிரியர் பணிக்கான தேர்வு ஜூன், ஜூலையில் நடந்திருக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், தீர்ப்புக்கு பின், தேர்வு நடத்தப்படும். கருணாநிதி பல்கலைக்கு அனுப்பிய கோப்புகளில் கவர்னர் இன்னும் கையெழுத்திடவில்லை. அவரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது.

அவர் அனுமதி மறுத்தால் நீதிமன்றத்தை நாடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us