/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கொடிகளுடன் டூவீலர் ஓட்டி ரகளை கல்லுாரி மாணவர்கள் மீது வழக்கு
/
கொடிகளுடன் டூவீலர் ஓட்டி ரகளை கல்லுாரி மாணவர்கள் மீது வழக்கு
கொடிகளுடன் டூவீலர் ஓட்டி ரகளை கல்லுாரி மாணவர்கள் மீது வழக்கு
கொடிகளுடன் டூவீலர் ஓட்டி ரகளை கல்லுாரி மாணவர்கள் மீது வழக்கு
ADDED : மார் 28, 2025 02:33 AM
திருநெல்வேலி:திருநெல்வேலியில் மறைந்த கராத்தே செல்வின் நினைவு தினம்நேற்று முன்தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதையொட்டி கல்லுாரி மாணவர்கள் சிலர் டூவீலர்களில் மூன்று நபர்களாக சென்று கையில் கொடிகளுடன் மற்ற கல்லுாரிகளின் முன்பாக நின்று கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து வைரலான வீடியோக்கள், புகாரின் அடிப்படையில் கல்லுாரி மாணவர்கள் சிலர் மீதும் அவர்கள் பயன்படுத்திய டூவீலர்கள் பதிவெண்களை கொண்டும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல மேலப்பாளையம், பெருமாள்புரம் பகுதிகளிலும் அனுமதி இன்றி போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களில் கொடிகளை கட்டிச் சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.