ADDED : மார் 24, 2025 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பெரியனேந்தலைச் சேர்ந்த கார்த்திகா 28, மார்ச் 22 திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். பின்னர் இன்டர்சிட்டி ரயிலில் சொந்த ஊர் புறப்பட்டார்.
அப்போது அவரது குழந்தை அணிந்திருந்த 4 கிராம் தங்க செயின் திருடு போனது. இதுகுறித்து திருநெல்வேலி ரயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தென்காசி பொட்டல்புதூர் திருமலையப்பபுரத்தைச் சேர்ந்த தவ்ஃபீக் 22, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து தங்கசெயினை மீட்டனர். பின் தவ்ஃபீக் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.