sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

முன்னாள் எஸ்.ஐ., கொலை; மேலும் ஒருவர் கைது

/

முன்னாள் எஸ்.ஐ., கொலை; மேலும் ஒருவர் கைது

முன்னாள் எஸ்.ஐ., கொலை; மேலும் ஒருவர் கைது

முன்னாள் எஸ்.ஐ., கொலை; மேலும் ஒருவர் கைது


ADDED : மார் 24, 2025 01:37 AM

Google News

ADDED : மார் 24, 2025 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனால் இவ்வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ., ஜாகிர் உசேன் நிலம் தொடர்பான முன் விரோதத்தில் மார்ச் 18 ல் ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட கார்த்திக் 32, அக்பர் ஷா 32, ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். முக்கிய குற்றவாளி தவ்ஃபீக் என்ற கிருஷ்ணமூர்த்தி தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார் அவரை துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர். கொலையாளிகளுக்கு சம்பவத்தன்று ஜாஹிர் உசேன் தொழுகை முடித்து வந்த பாதையை தெரிவித்ததாக 16 வயது பள்ளி மாணவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

நேற்று தவ்ஃபீக்கின் மனைவி நூர்னிஷாவின் தம்பி பீர் முகமது 37, கைது செய்யப்பட்டார். நூர்னிஷா கேரளாவில் பதுங்கியிருக்கலாம் என போலீசார் அங்கு தீவிரமாக தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us