sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

முதியவர் வெட்டிக் கொலை நில தகராறில் வெறிச் செயல்

/

முதியவர் வெட்டிக் கொலை நில தகராறில் வெறிச் செயல்

முதியவர் வெட்டிக் கொலை நில தகராறில் வெறிச் செயல்

முதியவர் வெட்டிக் கொலை நில தகராறில் வெறிச் செயல்


ADDED : ஜூன் 24, 2025 12:18 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, சொத்து தகராறில் முதியவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன், 60; விவசாயி. அதே கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 52. இருவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது. இந்த வழக்கில் வெங்கடேஸ்வரனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இதனால், வெங்கடேசன் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று மாலை ஆந்திர மாநிலம் விஜயபுரம் பகுதிக்கு சென்று, மீண்டும் அரும்பாக்கம் நோக்கி வெங்கடேஸ்வரன் இருசக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்தார்.

விஜயபுரம் அருகே வந்தபோது, எதிரே டிராக்டர் ஓட்டி வந்த வெங்கடேசன், ஆத்திரத்தில் இருசக்கர வாகனம் மீது மோதினார். இதில், வெங்கடேஸ்வரன் தவறி கீழே விழுந்தார்.

அவரை, மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடேசன் சராமாரியாக வெட்டினார். இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று இரவு 7:00 மணிக்கு வெங்கடேசன், கத்தியுடன் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இது குறித்து, விஜயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், வெங்கடேசன் மற்றும் இரண்டு பேர் சேர்ந்து, அவரை வெட்டியதாக தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தால் அரும்பாக்கம் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us