/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செப்., 19ல் அமைச்சர்களுக்கு தக்காளி பார்சல்
/
செப்., 19ல் அமைச்சர்களுக்கு தக்காளி பார்சல்
ADDED : செப் 17, 2025 03:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்:'அமைச்சர்களுக்கு தக்காளி பார்சல் அனுப்பப்படும்' என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன் மாநில ஊடகப்பிரிவு செயலர் ஈஸ்வரன் கூறுகையில், ''தக்காளி விலை, 14 கிலோ கொண்ட பெட்டி, 100 ரூபாய்க்கும் குறைவாக கொள்முதல் செய்யப்படுகிறது. தக்காளி விலை சரிவால் பாதிக்கப்படும் விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை.
''விவசாயிகளை கவனத்தில் கொள்ள வலியுறுத்தி, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், உணவு அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோருக்கு செப்., 19ல் தக்காளி பார்சல் அனுப்பப்படும்,'' என்றார்.

