sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

கண்டித்த தாயை அடித்து கொன்ற போதை மகன்

/

கண்டித்த தாயை அடித்து கொன்ற போதை மகன்

கண்டித்த தாயை அடித்து கொன்ற போதை மகன்

கண்டித்த தாயை அடித்து கொன்ற போதை மகன்


ADDED : ஜூன் 19, 2025 12:51 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:மது குடிப்பதை கண்டித்த தாயை கட்டையால் அடித்துக் கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே, காமாட்சிபட்டியை சேர்ந்தவர் அமராவதி, 75, கணவரை இழந்தவர். இவரது மகன் வேலுமணி, 47, வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றித்திரிந்த மகனை, அவரது தாய் கண்டித்தார்.

இதில், ஆத்திரமடைந்த மகன், நேற்று முன்தினம் இரவு, வீட்டு வாசலில் துாங்கிக் கொண்டிருந்த தாயின் தலையில் கட்டையால் அடித்து, அவரை கொலை செய்தார்.

வீட்டின் முன், காயத்துடன் மூதாட்டி இறந்து கிடப்பது குறித்து, அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

வீட்டுக்குள் இருந்த வேலுமணியை பிடித்து விசாரித்த போது, தாயை அடித்துக் கொலை செய்து விட்டு, ஒன்றும் தெரியாதது போல், வீட்டுக்குள் இருந்தது தெரிந்தது. முசிறி போலீசார். வேலுமணியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us