sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

லஞ்ச வழக்கில் 20 ஆண்டுக்கு பின் மின்வாரிய அதிகாரிக்கு '2 ஆண்டு'

/

லஞ்ச வழக்கில் 20 ஆண்டுக்கு பின் மின்வாரிய அதிகாரிக்கு '2 ஆண்டு'

லஞ்ச வழக்கில் 20 ஆண்டுக்கு பின் மின்வாரிய அதிகாரிக்கு '2 ஆண்டு'

லஞ்ச வழக்கில் 20 ஆண்டுக்கு பின் மின்வாரிய அதிகாரிக்கு '2 ஆண்டு'


ADDED : ஜூன் 19, 2025 01:01 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துவாக்குடி,:தனியார் நிறுவனத்துக்கு கூடுதல் மின்னழுத்தம் வழங்க, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், மின்வாரிய கூடுதல் தலைமை செயற்பொறியாளருக்கு, 20 ஆண்டுகள் கழித்து, ஈராண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் வைத்தீஸ்வரன் ஆக்ஸிஜன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்துக்கு கூடுதல் மின்னழுத்தம் கேட்டு, அந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் சரவணன் என்பவர், 2005ம் ஆண்டு விண்ணப்பித்தார்.

கூடுதல் மின்னழுத்தம் தர, மன்னார்புரம் மின்வாரிய அலுவலக கூடுதல் தலைமை செயற்பொறியாளர் ஆறுமுகம், 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். முன்பணமாக, 5,000 ரூபாய் கேட்டார். லஞ்சம் தர விரும்பாத சரவணன், போலீசில் புகார் அளித்தார். திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சப்பணத்தை வாங்கும் போது ஆறுமுகத்தை கைது செய்தனர்.

திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி இவ்வழக்கில், 20 ஆண்டுகளுக்குப் பின், ஆறுமுகத்துக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.






      Dinamalar
      Follow us