/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
15 கிலோ குட்கா பறிமுதல் மூவர் மீது வழக்கு
/
15 கிலோ குட்கா பறிமுதல் மூவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 05, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வீட்டில் 15 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த மூன்றுபேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், வாணியர் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, தக்கா தெருவை சேர்ந்த ஜாபர் அலி, 39; ஜி.ஆர்.பி., தெரு பிரபு, 40; ஜெயபிரகாஷ், 42; ஆகியோர் ஒரு வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட 15 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, குட்காவை பறிமுதல் செய்து ஜாபர் அலி உட்பட மூன்றுபேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். இதில், ஜாபர் அலியை கைது செய்து விசாரிக்கின்றனர்.