ADDED : ஜூலை 05, 2025 06:53 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் ரூபாய் 1 கோடியே 25 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ள ஒன்றிய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவி துரை தலைமை தாங்கினார்.
துணை சேர்மன் ஜீவிதா ரவி, பி.டி.ஓ., சையது முகமது முன்னிலை வகித்தனர். மேலாளர் கலைவாணி வரவேற்று தீர்மானங்களை படித்தார்.
கூட்டத்தில் விக்கிரவாண்டி ஒன்றியத்தில், 30 இடங்களில் ரூபாய் 1 கோடியே 25 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்வது மற்றும் ஊரக உள்ளாட்சிகளில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை 15 இடங்களில் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர் செந்தில் வடிவு, கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.