sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சேதமடைந்து வரும் வணிக வளாகம்

/

சேதமடைந்து வரும் வணிக வளாகம்

சேதமடைந்து வரும் வணிக வளாகம்

சேதமடைந்து வரும் வணிக வளாகம்


ADDED : மார் 26, 2025 05:21 AM

Google News

ADDED : மார் 26, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டியில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வணிக வளாக கட்டடம் சேதம் அடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன் அப்புறப்படுத்தி புதிய கட்டடங்கள் கட்ட வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

காரியாபட்டி பேரூராட்சியில் வருவாயை பெருக்க 20 ஆண்டுகளுக்கு முன் மதுரை அருப்புக்கோட்டை ரோடு, பஸ் ஸ்டாண்ட் அருகே 50க்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகள் கட்டப்பட்டன. வணிகர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வந்து செல்ல ஏதுவாக இருந்தது. இந்நிலையில் போதிய பராமரிப்பு இன்றி கட்டடங்கள் சேதம் அடைந்து விரிசல் ஏற்பட்டு, ஆங்காங்கே கூரை பெயர்ந்து விழுகின்றன. மழை நேரங்களில் கசிவு ஏற்பட்டு வருவதால், ஆவணங்கள், பொருட்கள் சேதமாகிறது. எப்போது இடிந்து விழுமோ என வணிகர்கள், அலுவலகமாக பயன்படுத்தி வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

உள்பக்க கடைகள் பல பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சிறுநீர் கழிப்பிடமாக மாறி, சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. துர்நாற்றத்தால் அப்பகுதியில் கடை நடத்துபவர்கள் முகம் சுளிக்கின்றனர். குடிமகன்கள் தொல்லையால் பெண்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியவில்லை. இது ஒரு புறம் இருந்தாலும், இடிந்து விழும் சூழ்நிலையில் இருப்பதால், விபத்திற்கு முன் கட்டடத்தை அப்புறப்படுத்தி, நவீன முறையில் புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us