sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசியில் 3 மாதங்களில் 5 பேர் கொலை சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 38 பேர் கைது

/

சிவகாசியில் 3 மாதங்களில் 5 பேர் கொலை சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 38 பேர் கைது

சிவகாசியில் 3 மாதங்களில் 5 பேர் கொலை சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 38 பேர் கைது

சிவகாசியில் 3 மாதங்களில் 5 பேர் கொலை சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 38 பேர் கைது


ADDED : மார் 26, 2025 05:21 AM

Google News

ADDED : மார் 26, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசியில் மூன்று மாதங்களில் 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 38 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிவகாசி அருகே திருத்தங்கல் கண்ணகி காலனியில் ஜன. 11ல் காதல் விவகாரத்தில் கல்லுாரி மாணவர் வீரமாணிக்கம் கொலை செய்யப்பட்டார். சிவகாசி முருகன் காலனியில் பிப். 13 ல் குடும்ப தகராறில் ராஜலட்சுமி அவரது கணவர் திருமலைகுமாரால் கொலை செய்யப்பட்டார்.

விஸ்வநத்தத்தில் பிப். 25 ல் குடும்ப தகராறில் வீரமணி 47, அவரது மருமகனால் கொலை செய்யப்பட்டார். சிவகாமிபுரம் காலனியில் மார்ச் 8 முன் விரோதத்தில் பட்டாசு தொழிலாளி கருப்பசாமி 30, 4 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

சிவகாசி முனீஸ் நகரில் மார்ச் 16 ல் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த சுரேஷ் 27, பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுரேஷின் கள்ளக்காதலி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகாசியில் கடந்த 3 மாதங்களில் 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தவிர சிறு சிறு திருட்டு சம்பவங்களும் நடந்துள்ளது. இதையடுத்து சிவகாசி சப் டிவிஷனில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், கொலை, கொலை முயற்சி வழக்கில் சிறை சென்று ஜாமினில் வந்தவர்கள் என 38 சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து டி.எஸ்.பி பாஸ்கர் கூறுகையில்: சிவகாசியில் சமீபத்தில் நடந்த கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், சம்பவம் நடந்த அன்றே கைது செய்யப்பட்டு விட்டனர். குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு ரோந்து பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், என்றார்.






      Dinamalar
      Follow us