sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விடுதியில் மதம் மாற்ற முயற்சி வார்டன் மீது மாணவியர் புகார்

/

விடுதியில் மதம் மாற்ற முயற்சி வார்டன் மீது மாணவியர் புகார்

விடுதியில் மதம் மாற்ற முயற்சி வார்டன் மீது மாணவியர் புகார்

விடுதியில் மதம் மாற்ற முயற்சி வார்டன் மீது மாணவியர் புகார்


ADDED : செப் 19, 2025 02:44 AM

Google News

ADDED : செப் 19, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:காளையார்கோயில் அரசு விடுதியில், பைபிள் வாசிக்குமாறு மாணவியரை வற்புறுத்துவதோடு, மதம் மாற்ற முயற்சிப்பதாக வார்டன் மீது புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் எதிரே அரசு மாணவியர் விடுதி உள்ளது. இங்கு 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 68 பேர் தங்கியுள்ளனர். வார்டனாக காரைக்குடி லட்சுமி பணிபுரிகிறார்.

தன் மகளை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் முயற்சியில் லட்சுமி ஈடுபடுவதாக, மருதங்கநல்லுாரை சேர்ந்த மணிமேகலை, கலெக்டர் பொற்கொடியிடம் புகார் அளித்தார்.

மணிமேகலை கூறுகையில், 'மாணவியரை தினமும் பைபிள் வாசிக்க செய்து, கடவுள் வணக்க கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் வற்புறுத்தினார். மதம் மாற்றும் முயற்சியில் வார்டன் ஈடுபட்டு வருகிறார். அழுகிய காய்கறிகளை பயன்படுத்தி சமைக்கின்றனர். இது குறித்து கலெக்டரிடம் புகார் செய்தேன்,'' என்றார்.

லட்சுமி கூறுகையில், ''காலாண்டு, அரையாண்டு தேர்வின் போது, பைபிள் வைத்து கடவுள் வணக்கம் பாடச் சொன்னோம். புகார் எழுந்தபின் நிறுத்திவிட்டோம். இப்புகார் குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திலும் எழுத்துபூர்வ விளக்கம் அளித்து விட்டேன்,'' என்றார்.






      Dinamalar
      Follow us